சசிகலாவை நோக்கி தான் அதிமுக போகுது! ’ஏக்நாத்’ அப்படியே அண்ணாமலைக்கும் பதில் சொன்ன நாஞ்சில் சம்பத்!
புதுக்கோட்டை : சசிகலா தலைமையை நோக்கி அதிமுக நகர்ந்து கொண்டிருக்கிறது என அதிமுக முன்னாள் நிர்வாகியும், தற்போதைய திமுக பேச்சாளருமாகிய நாஞ்சில் சம்பத் அதிரடியாக கூறியுள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் திமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சசிகலா தலைமையை நோக்கி அதிமுக நகர்ந்து கொண்டிருக்கிறது' என்றார்,
அரசியல் அனாதை ஆவார் எடப்பாடி! விளாசிய நாஞ்சில் சம்பத்.. ஓபிஎஸ், சசிகலா பற்றி என்ன சொன்னார் தெரியுமா
நாஞ்சில் சம்பத்
மேலும், " இலவசங்களை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசு கூறி வருகிறது. பத்தாயிரம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்து, ரூபாய் 5,000 கோடி வரியை கார்ப்பரேட்டுகளுக்கு ரத்து செய்தது தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு கேடு. ஏழைகளுக்கு இலவச நலத்திட்ட உதவிகளை செய்வதல் கேடு விளைவது இல்லை.
அண்ணாமலை
பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தமிழகத்தில் மகாராஷ்டிரா போல் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுவார் என கூறுகிறார். பீகார் மாநிலத்தில் ஒரு ஏக் நாத் ஷிண்டே உருவாகிவிட்டார். ஆனால் தமிழகத்தில் அதுபோல் சாத்தியமில்லை.
நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் இடத்திற்கு வரவில்லை. ஆனால் அன்னை தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சத்தில் அகற்ற முடியாத இடம் அவருக்கு உண்டு. நெல்லை கண்ணன் பட்டம் பெறாமல் பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் கற்றறிந்த ஒரு பேராசிரியர்.
அரசியலுக்கு அங்கீகாரம்
கம்பரையும் கண்ணதாசனையும் பாரதியையும் நெல்லை கண்ணன் அவர்கள் பேசி கேட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் தவம். காந்தி குறித்தும் காமராஜர் குறித்தும் அவர் பேசினால் நம்மை ஒரு புதிய உலகத்திற்கு இட்டுச் செல்லும். அதீத திறமையும் ஆற்றலும் தமிழ்நாட்டின் அரசியலுக்கு அங்கீகாரம் பெறாது என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு" என்றார்.