போதை பொருள் ஒழிப்போம்..குறும்படம் வெளியிட்ட கல்லூரி மாணவர்கள்..சுதந்திர தினத்தில் பாராட்டு சான்றிதழ்
புதுக்கோட்டை: இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின விழா பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் ஏற்பாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காமராஜ் நகரில் நடைபெற்ற 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கதின் தலைவர் ஸ்ரீபிரசன்னா சரவணன் தலைமையில் மாநில பேச்சாளர் கவிஞர் பெர்னாட்ஷா முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் வீரர்கள் அணிவகுப்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

மேலும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் " போதை பொருள் ஒழிப்போம்" குறும்படம் வெளியிட்ட நாட்டுக்கல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சரவணன், அபினேஷ், கோபால கிருஷ்ணன் ஆகிய மூவரையும் பாராட்டி பாராட்டு நற்சான்றிதழை தீயணைப்பு அதிகாரி சந்தானம்,கவிஞர் பெர்னாட்ஷா வழங்கினர்.
மாணவ மாணவிகளுக்கு நோட், பேனா,பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்டவைகளை தீயணைப்பு துறை வீரர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வீரர்களின் செயலை வெகுவாகப் பாராட்டி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் பாராட்டு நற்சான்றிதழை கவிஞர் பெர்னாட்ஷா வழங்கி சிறப்பித்தார்.
இதில் பொது மக்கள், அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கதினர் என பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications