மாந்த்ரீக சக்தி அதிகரிக்க 3 வயது சிறுமி நரபலி.. புதுக்கோட்டையில் மந்திரவாதி பெண் கைது
3 வயது குழந்தை நரபலி செய்ததாக பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

புதுக்கோட்டை: "ஆமாம்.. எனக்கு மாந்திரீக சக்தி அதிகமாகணும்னு நினச்சேன்.. அதான் கழுத்தை அறுத்தேன்.. கொலை செய்தேன்" என 3 வயது சிறுமியை நரபலி செய்த மந்திரவாதி பெண் தெரிவித்துள்ளார்.
இலுப்பூர் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி - முருகாயி. இவர்களது மகள்தான் 3 வயது ஷாலினி. கடந்த 26-ம் தேதி சாயங்காலம் தன் வீட்டு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள்.
[என்ன கொடூரம்.. பாம்பு கடித்து ஐசியூவில் அட்மிட் ஆன சிறுமி.. கட்டி வைத்து சீரழித்த ஐவர்!]

ரத்த வெள்ளத்தில் சிறுமி
அதனால் பதறி போன பெற்றோர், குழந்தையை தேட ஆரம்பித்தார்கள். எல்லா இடங்களிலும் தேடி கடைசியில் வீட்டிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த காட்டுப் பகுதியில் சிறுமி கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தங்களது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர்.

சின்னப்பொண்ணு
தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து உடனடி விசாரணையில் இறங்கியதுடன், அதே பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போதுதான் சின்னப்பொண்ணு கூறிய தகவல்களை கேட்டு போலீசார் உட்பட எல்லோருமே ஷாக் ஆகி நின்றார்கள்.

கழுத்தை அறுத்தேன்
பெண் மந்திரவாதி இதுபற்றி சொன்னதாவது: "என்னுடைய மாந்திரீக சக்தி அதிகரிக்க வேணும்-னு நினைச்சேன். அதுக்காக 3-வயது சிறுமியை நரபலி கொடுத்தால் எனக்கு பலம் வந்துடும்னு கணக்கு போட்டேன். அதனால்தான் சிறுமியை அழைத்து கொண்டு போய் கழுத்தை அறுத்து கொலையும் செய்தேன்" என்றார் கூலாக.

ஷாக்கில் மக்கள்
இதையடுத்து மந்திரவாதி பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு குழந்தையை இரக்கமின்றி துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற இந்த சம்பவமும், அதற்கு மந்திரவாதி பெண் கூறிய காரணமும் கேட்டு மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications