புதுச்சேரியிலும் பீகார் மாடல்.. உடைகிறதா பாஜக கூட்டணி? சட்டசபை வரை “பஞ்சாயத்து” -அப்செட்டில் என்.ஆர்
புதுச்சேரி: ஆளும் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்வதாக பேச்சு அடிபட்ட நிலையில், நேற்று சட்டமன்றத்திலேயே பாஜக எம்.எல்.ஏக்கள் அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே தமிழிசை பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ், திமுக கட்சியினர் நிதீஷ் குமார் நிலை ரங்கசாமிக்கு வரும் என்று தெரிவித்தனர்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியோ, "புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள்." என்று குற்றம்சாட்டினார்.

சுயேட்சை எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன், "எனக்கு தெரியாமலேயே என்னுடைய தொகுதியில் கோயில் கமிட்டி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கிறார்கள். நான் பாஜகவை ஆதரிக்கிறேன் என்பதால் அரசு இப்படி செய்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

அரசு மீது புகார்
மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாஸும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பின்னர் சட்டசபையில் பேசிய பாஜக எம்.எம்.ஏ கல்யாணசுந்தரம், "அறநிலையத்துறை எம்.எல்.ஏக்களின் ஆலோசனையை கேட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதே விதிமுறை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இதை பின்பற்றுகிறார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் இதை கடைபிடிக்கவில்லை.

ஆட்சியில் இருக்க அவசியமில்லை
பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்பதற்காக பழிவாங்குகிறார்களா என்பதை இங்கேயே சொல்லிவிடுங்கள். நாங்கள் கையெழுத்து போட்டே முதல்வராக்கியுள்ளோம். எங்களுக்கு இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக, பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி சபாநாயகர், உள்துறை அமைச்சர் தொகுதியிலும் இதேநிலைதான்.

கூட்டணியில் பிளவு
பிரதமர் நிதி ஒதுக்கவில்லை. நிதி ஆணையத்தில் சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள். நாம் இங்கு கூட்டணி அரசை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன." என்றார். கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்களே சட்டசபையில் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளது ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தியுள்ளதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications