அரசு அதிகாரிகள் மெத்தனம்.. திறனற்ற அறநிலையத்துறை.. தொடர் தேர் விபத்தால் கொதித்தெழுந்த அண்ணாமலை
புதுக்கோட்டை: தமிழகத்தில் இன்று புதுக்கோட்டையில் தேர் விபத்து நடந்ததில் 8 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து தேர் விபத்துகள் நடைபெறுவதற்க அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் , இந்து அறநிலையத்துறையின் திறனற்ற செயல்பாடும் தான் காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று கோவிலில் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

விபத்தில் சிக்கிய தேர்
இதையொட்டி தேரோட்டத்துக்காக தேர் தயார் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலை தேரை பக்தர்கள் படம் பிடித்து இழுத்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

8 பேர் காயம்
இதனை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். இருப்பினும் தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டனர். காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தேர் விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அண்ணாமலை டுவிட்
இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இன்று காலை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இன்று புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிகாரிகள் தான் காரணம்
தமிழக பாஜக சார்பாக மாவட்ட தலைவர் செல்வன் அழகப்பன், காயமடைந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்துள்ளார். அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும் இந்து சமய அறநிலையதுறையின் திறனற்ற செயற்பாட்டாலும் இதுபோன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காயமடைந்த மக்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கையாகும்'' என தெரிவித்துள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications