Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுக்கோட்டை கலெக்டர் பங்களாவில் விநாயகர் சிலை உடைந்ததா? பரவிய தகவல்.. மாவட்ட நிர்வாகம் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்களாவில் இருந்த விநாயகர் சிலையை ஆட்சியர் மெர்சி ரம்யா அகற்ற உத்தரவிட்டதால், அதனை அகற்றும்போது சிலை உடைந்துவிட்டதாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்களாவின் நுழைவாயிலில் விநாயகர் சிலை ஒன்று நீண்ட காலமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு அண்மையில் மாற்றப்பட்டு தற்போது மெர்சி ரம்யா புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவர் இதுவரை கலெக்டர் பங்களாவில் குடியேறவில்லை. பங்களாவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Pudukottai District administration given an explanation amid hindu organizations condemned

இந்நிலையில் கலெக்டர் பங்களா வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், நேற்று பிள்ளையார் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும், அகற்றும்போது சிலை உடைந்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த தகவல் பரவிய நிலையில், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர்.

பிள்ளையார் சிலையை அகற்றியது ஆட்சியர் மெர்ஸி ரம்யாவின் ஆழமான மத உணர்வை காட்டுகிறது என்று கொந்தளித்த இந்து அமைப்பினர், இதற்கு எதிராக தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். ஆனால், விநாயகர் சிலை உடைந்துவிட்டதாக பரவும் தகவல் பொய்யானது என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவல் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது.

அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம் கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+