ஊர் பணத்தை எடுக்கலாம்னு நினைக்காதீங்க... வேட்பாளர்களுக்கு இளைஞர்கள் எச்சரிக்கை
புதுக்கோட்டை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நபர்கள் தேர்தலுக்காக செலவழித்த பணத்தை சம்பாதித்து விடலாம் என நினைத்துவிட வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞர்கள் பேனர் வைத்துள்ளனர் .
பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலவயல் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், தேர்தலில் வெற்றி பெறுபவர்களிடம் ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கு கேட்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் நடந்தது கண்டறியப்பட்டால் அவர்களின் விவரங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தேர்தல்
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக நாளை நடைபெறவுள்ளதால் கிராமங்கள் தோறும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. வெளியூரில் வசிக்கக் கூடிய பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக கிராமங்களில் குவிந்து வருகின்றனர்.

பேனர்
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரில், தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் ஊராட்சிக்கு வரும் அரசு பணத்தை எடுத்துவிடலாம் என நினைக்கவேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. வரவு செலவு கணக்குகளை ஊர் மக்கள் முன்னிலையில் வருடந்தோறும் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளம்
ஊராட்சி பணத்தில் முறைகேடும், ஊழலும் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு காரணமானவர்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கையால் தேர்தல் போட்டியிடுபவர்கள் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர்.

முதல்வர்
மேலும், முதலமைச்சரின் தனி புகார் பிரிவு, மாவட்ட ஆட்சியரிடமும் ஊழல் தொடர்பாக புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கவைக்கப்படும் என்றும் ஆலவயல் ஊராட்சி இளைஞர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications