Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை தூக்கிகொண்டு ஓடிய மர்ம நபர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற வாக்குப்பெட்டி போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என கிராமப்புறங்களை சார்ந்த பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை5 மணிக்கு நிறைவு பெற்றது.

recovered theft ballot box by police near pudukkottai

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்படித்தான் வாக்கு எண்ணிகை மையத்துக்கு அனுப்புவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு இருந்தது. இன்று மாலை அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரை தள்ளிவிட்டுவிட்டு, வாக்குக்சாவடியின் பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பட்டியை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

இதையடுத்து உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீலை உடைக்கும் முன்பே பத்திரமாக மீட்டனர். வாக்குப்பெட்டியை திருடிச் சென்ற 2 பேரை போலீசார கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+