புதுக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வாழ்நாளில் மறக்க மாட்டார்.. தலைகீழாக மாற்றிய ஒரே ஒரு ரசீது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே பன்னிரெண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி என்ற விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கும் இடையே வேலி அமைப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வீரமணி புகார் கொடுத்தார். அவரிடம் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் 10000 லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க ரசாயனம் தடவிய நோட்டுகளை தருகிறார்கள். அந்த நோட்டுகளை வாங்கும் அதிகாரிகள் அப்படியே சிக்கி கொள்வார்கள்.

அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்வார்கள். அப்படி கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அந்த வழக்கை அவர்கள் பணியில் சேர்ந்தாலும் எதிர்கொள்ள வேண்டும். குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க போராட வேண்டியதிருக்கும். இந்த பிரச்சனை இப்போது பல அரசு ஊழியர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே பன்னிரெண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 54 வயதாகும் வீரமணி என்ற விவசாயிக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கும் இடையே வேலி அமைப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் விவசாயி வீரமணி புகார் கொடுத்திருந்தாராம்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வீரமணி விரும்பி உள்ளார்.அதற்கு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு ரசீது தேவைப்பட்டது. இதனால் கடந்த 8-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் தான் அளித்த புகார் மனுவுக்கு ரசீது தரும்படி கேட்டிருக்கிறார்.
இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமணி இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், ஜவகர் மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுக்குமாறு வீரமணியை அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்படி அந்த பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் வீரமணி கொடுத்தார். அதனை சங்கர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications