விராலிமலையில் விஜயபாஸ்கர்... வீடு வீடாக சென்று கொரோனா நிவாரண நிதி உதவி
புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு சென்று கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
கொரோனா விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது முதல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னையில் முகாமிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தனது தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு நேற்றிரவு புறப்பட்டு வந்த அவர் இன்று காலை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கினார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட பணமில்லாமல் சிரமப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார்.

இதனிடையே விஜயபாஸ்கர் விராலிமலையில் இருந்தார் என்றால் அவருடன் ஒரு பெரும்படையே சுற்றி வரும். ஆனால் தற்போது சமூக விலகலை கடைபிடிப்பதை வலியுறுத்தும் வகையிலும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும் தன்னுடன் யாரும் வரக்கூடாது என கட்சியினருக்கு அன்புக்கட்டளை பிறப்பித்துவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். தனி ஆளாக பேரூராட்சி ஊழியர் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு நிவாரண உதவி வழங்க சென்றார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கை முழுவதுமாக அமல்படுத்துவது பற்றி கேட்டறிந்தார். பொதுவாக அமைச்சர்களை பொறுத்தவரை வாரத்தில் 5 நாட்கள் சென்னையில் இருந்தாலும் 2 நாட்கள் கட்டாயம் தொகுதிகளில் வலம் வருவர். ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையிலேயே விஜயபாஸ்கர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications