புனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி!
புனே: புனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கொந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு 60 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சுற்றுச்சுவரை ஒட்டியபடியே குடியிருப்புக்குள் வாகனங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன.
சுற்றுச்சுவருக்கு வெளியே குடிசைப்பகுதி இருந்தது. இந்த குடிசைகளில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

பாய்ந்த கார்கள்
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி நீள சுற்றுச்சுவர் திடீரென சரிந்து குடிசைப்பகுதியில் விழுந்தது. இதனால் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சுவர் இடிந்து விழுந்த பகுதியில் சரிந்து பாய்ந்தன.

4 குழந்தைகளும் அடக்கம்
இந்த கோர விபத்தில் 15 பேர் பலியாயகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆண்கள், ஒரு பெண், 4 குழந்தைகள் என்பது உறுதியாகியுள்ளது.

பலர் உயிரிழந்திருக்கலாம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 60 அடி நீள சுவர் என்பதால் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் முடிந்தபின்னரே
ஆனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் முழு எண்ணிக்கையும் இதுவரை வெளியாகவில்லை. மீட்புப்பணிகள் முடிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications