டி.ஆர்.பி முறைகேடு... பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது!
புணே: தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் டி.ஆர்.பி(TRP) நடைமுறையில் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனத்தின் பார்க்(BARC) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்து வருகிறது.

தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் TRP நடைமுறையில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக மும்பை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. பார்வையாளர் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட வீட்டினருக்கு பணம் தந்து குறிப்பிட்ட சேனலை மட்டும் ஓட வைத்து பார்வையாளர் மதிப்பீட்டு புள்ளிகளை உயர்த்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகினர். ஏற்கெனவே ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் BARC-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி புனேவை சேர்ந்த பார்த்தோ தாஸ்குப்தாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். புனேவின் ராஜ்காட் காவல் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு போலீசார் பார்த்தோ தாஸ்குப்தாவை கைது செய்துள்ளனர்.
அவரை வெள்ளிக்கிழமை மும்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவர்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வழக்கில் மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்படும் 15-வது நபர் பார்த்தோ தாஸ்குப்தா ஆவார்.இந்த வழக்கில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications