கிரிப்டோகரன்சி.. பணம் கொட்டும்.. பெண் டாக்டரின் ஆசையைத் தூண்டி 30 லட்சம் அபேஸ்

Subscribe to Oneindia Tamil

புனே: மகாராஷ்டிர மாநிலத்தில் கிரிப்டோகரன்சி மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பெண் மருத்துவரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்தப் பணத்தை மருத்துவர் பல வங்கிக் கணக்கு எண்களுக்கு தொடர்ந்து பணப் பரிமாற்றம் செய்து வந்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு வகைகளில் புதிய புதிய உத்தியுடன் மோசடி கும்பல் களம் இறங்குவதும், அதில் பொதுமக்கள் சிக்குவதும் நாள்தோறும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. இதுதொடர்பாக எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பணத்தின் மீது கொண்ட ஆசையால் ஏதாவது ஒரு வகையில் பொதுமக்கள் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். எளிய மக்கள் மட்டும்தான் சிக்குகின்றனரா என்றால் கண்டிப்பாக இல்லை. மெத்த படித்தவர்கள்கூட மோசடி கும்பலிடம் சிக்கி லட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கில் பணத்தை இழக்கும் சம்பவங்கள்தான் அதிகளவில் நடக்கின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரத்தில் மருத்துவரிடம் மொபைல் போன் மூலம் லட்டக்கணக்கில் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime maharashtra

மகாராஷ்டிர மாநிலம், கோனி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான பெண் மருத்துவர். இவரது மொபைல் போனுக்கு கடந்த வாரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், தான் தாய்லாந்தில் இருந்து பேசுகிறேன். எனது முகவரிக்கு மூன்று பாஸ்போர்ட்டுகள், மூன்று சிம் கார்டுகள், சில மருந்துகளைக் கொண்ட ஒரு பார்சல் தனக்கு வந்துள்ளது. அந்த பார்சலில் உங்கள் பெயர்தான் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அவரிடம் கிரிப்டோகரன்சி குறித்தும் பேசியுள்ளார்.

Crime Maharashtra

மேலும், கிரிப்டோகரன்சி வாங்கினால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று மருத்துவரின் ஆசையைத் தூண்டியுள்ளார். இதையடுத்து, அந்த நபரின் வார்த்தையை நம்பிய பெண் மருத்துவர் தானும் கிரிப்டோகரன்சி வாங்குவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் சில வங்கிக் கணக்கு எண்களைக் கொடுத்து அதற்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பி மருத்துவரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் இருந்து 6 ஆம் தேதி வரையில் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கிட்டத்தட்ட ரூ. 30,86,535 பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த நபரிடம் இருந்து மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, தான் வசமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடி நபரைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+