2 கொலை.. பழி வாங்க நடந்த இன்னும் 2 கொலை.. ராமநாதபுரத்தை உறைய வைத்த கேங்-வார்!
ராமநாதபுரத்தில் கேங் வார் காரணமாக 4 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கேங் வார் காரணமாக 4 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ராமநாதபுரத்தில் வாலாந்தரவை பகுதியில் கடந்த மே மாதம் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 20ம் தேதி நடந்த இந்த கொலையில் விஜய் மற்றும் மணி என்று இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்டனர்.

பாஸ்கர் என்ற ''லோக்கல் டானின்'' ஆதரவாளர்கள் இவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் எதிர்கேங்கை சேர்ந்த கார்த்தி மற்றும் விக்கி என்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் சில நாட்களில் ஜாமீனும் பெற்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் இவர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று போலீஸ் நிலையம் அருகேயே வைத்து இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, வெளியே வரும் போது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டு உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதில் தற்போது பாஸ்கரன் கேங்கை சேர்ந்த அர்ஜூன், முரளி, பாஸ்கரன், ரூபன், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் கிடையாது. இதில்வேறு சிலர் தொடர்பாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நான்கு கொலையும் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications