பெண் எஸ்.ஐ மீது கை வைத்து தள்ளிய பாஜக நிர்வாகி.. தட்டித் தூக்கி சிறையில் வைத்த ராமநாதபுரம் போலீஸ்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது பெண் சார்பு ஆய்வாளர் மீது கை வைத்து தள்ளிய பாஜக நிர்வாகி சண்முகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரையில் நேற்று பேரணியை தொடங்க திட்டமிட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

தடையை மீறி பாஜகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக மாநில மகளிரணி தலைவர் உமா ரவி உட்பட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவினர், காவல்துறையினரின் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது பெண் சார்பு ஆய்வாளர் மீது பாஜக அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கை வைத்து தள்ளியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாஜக நிர்வாகி சண்முகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications