Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெல்வாரா?அனுதாப அலையால் அதிமுகவுக்கு ஷாக்.. தந்தி டிவி சர்வேயில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக ஓ பன்னீர் செல்வம் களமிறங்கி உள்ளார். இவர் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான சிட்டிங் எம்பி நவாஸ் கனி, அதிமுகவின் ஜெயபெருமாள் ஆகியோரை எதிர்க்கிறார். இந்நிலையில் தான் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் யார் வெல்வார்கள்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இந்த ரிசல்ட் அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Ex CM O Panneer Selvam will win in Ramanathapuram Seat Thanthi Tv Opinion polls says this

தந்தி டிவி சார்பில் இந்த கருத்து கணிப்பு என்பது மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி ராமநாதபுரம் தொகுதியில் வெல்வது யார்? என்பது பற்றி ரிசல்ட் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் தொகதியில் சிட்டிங் எம்பியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி உள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக நவாஸ் கனியே களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் ஜெயபெருமாள் என்பவரும், நாம் தமிழர் சார்பில் சந்திரபிரபா என்பவரும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பாஜக கூட்டணியில் இந்த தொகுதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் போட்டியிட்டுள்ளது. அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் பெயரில் மேலும் 5 ஓபிஎஸ்கள் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர். இதனால் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ராமநாதபுரம் தொகுதி தொடர்பாக தந்தி டிவி மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் 2வது இடம் தான் பிடிப்பார் என தெரிவிக்கப்பட்ள்ளது. அதாவது இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெறுவார் எனவும், அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நவாஸ் கனி 34 முதல் 40 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக முன்னாள் முதல்வரும், பாஜக கூட்டணி வேட்பாளருமான ஓ பன்னீர் செல்வம் 30 முதல் 36 சதவீத ஓட்டுகளை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக வேட்பாளர் 20 ச முதல் 26 சதவீத ஓட்டுகளையம், நாம் தமிழர் வேட்பாளர் 6 முதல் 9 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் 1 முதல் 3 சதவீத ஓட்டுகளையும் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொகுதியை பொறுத்தமட்டில் ஓ பன்னீர் செல்வம் மீது அனுதாபம் உள்ளது. இது அவருக்கு பாசிட்டிவ்வாக உள்ளது. இருப்பினும் அவர் சுயேச்சை சின்னமான பலாப்பழத்தில் போட்டியிடுவது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அவரது சின்னம் பின்தங்கி இருப்பது, ஓ பன்னீர் செல்வத்துக்கு போட்டியாக மேலும் 5 ஓபிஎஸ்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை நெகட்டிவ்வாக உள்ளது.

மேலும் ஓ பன்னீர் செல்வம் தான் சார்ந்த குறிப்பிட்ட சமுதாயம் மீது அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் பிற சமுதாயத்தினரின் ஓட்டு என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+