ராமநாதபுரத்தில் சார் பதிவாளருக்கு பணமழை.. இறுதியில் நம்பவே முடியாத இரண்டு சிக்கல்
இராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த போது, சார்பதிவாளர் ராமநாதன் மற்றும் பத்திர எழுத்தர் அயூப்கான் ஆகியோர் பத்திரப்பதி வுக்கு ரூ.50 ஆயிரம் கேட்டு அதில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் இவர்கள் நில மோசடி வழக்கிலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதாகும் ஹாலிக் அலாவுதீன் என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். ராமநாதபுரம் அருகே குயவன்குடி கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தை தனது தாயார் பெயரில் பதிவு செய்ய விரும்பி உள்ளார். இதற்காக ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதனை அணுகி உள்ளார். அப்போது பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் ராமநாதன், ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாலிக் அலாவுதீன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.3 லட்சத்தை சார்பதிவாளரின் வங்கி கணக்கிலும், ரூ.17 லட்சத்தை சார்பதிவாளருக்கு நெருக்கமான அயூப்கான் என்பவரிடமும் வழங்கினாராம். இதையடுத்து கடந்த 18-ந்தேதி அன்று மீண்டும் பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளரை சந்தித்த போது, மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யமுடியும் என சார்பதிவாளர் கூறினாராம்.
பின்னர் மீண்டும் பேசி ரூ.10 லட்சம் குறைத்து ரூ.15 லட்சம் கேட்டதுடன், அதில் ரூ.3 லட்சம் ரொக்கமாக அயூப்கானிடமும், ரூ.12 லட்சத்தை குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிலும் செலுத்துமாறு கூறினாராம். ஆனால் மேலும் மேலும் பத்திரப்பதிவுக்காக லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹாலிக் அலாவுதீன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ஹாலிக் அலாவுதீன் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்தை கடந்த வாரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அயூப்கானிடம் கொடுத்தனுப்பினார்கள். அவர் வாங்கிய போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அயூப்கான் (53) மற்றும் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதனை (59) கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே 5 ஏக்கர் நிலம் அப்துல்காதர் என்பவர் பெயரில் இருக்கிறது. இந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து சிலர் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அப்துல்காதரின் மகள் ஜமாலியா புகார் அளித்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில் புதுமடம் வடக்குத்தெருவை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் உள்பட சிலர் கூட்டு பட்டா இருப்பது போல் அப்துல்காதர் இடத்திற்கான போலி ஆவணங்கள் தயாரித்து வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததை கண்டுபிடித்தனர். இந்த போலி பத்திரப்பதிவுக்கு சார்பதிவாளர் ராமநாதன், பத்திர எழுத்தர் அயூப் கான் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து லஞ்ச வழக்கில் கைதான சார்பதிவாளர் ராமநாதன், பத்திர எழுத்தர் அயூப்கான் ஆகியோரை நில மோசடி வழக்கில் இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதனிடையே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதனை இராமநாதபுரம் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்














Click it and Unblock the Notifications