Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊரெல்லாம் மநீமவுக்கு ஆறுதல்.. சொந்த ஊரில் ஆண்டவருக்கு வந்த சோதனை.. பரமக்குடியில் 4வது இடம்!

பரமக்குடியில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது கமலின் மக்கள் நீதி மய்யம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Elections 2019: 3-வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக!- வீடியோ

    பரமக்குடி: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    தேர்தலில் தனித்து போட்டி என்றவுடன் கமல் எப்படியோ களத்தில் இறங்க போகிறார் என்ற தகவல் வேகமாக பரவியது. அதனால் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற ஆர்வத்தையும் கூட்டியது.

    ஒரு கட்டத்தில் அவரின் சொந்த ஊரான பரமக்குடி, ராமநாதபுரத்தில் உள்ளதால் அவர் அங்கு போட்டியிட விரும்புவதாகவும் தகவல் வெளியானது. ஏனென்றால், அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவும், திமுக கூட்டணி கட்சியான இந்திய முஸ்லீம் கட்சியும் ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதால் அது மக்கள் நீதி மய்யத்திற்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்பட்டது.

    இலவச குடிநீர்

    இலவச குடிநீர்

    வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும்வரை கமல் இது பற்றி வாயே திறக்கவில்லை. ஆனாலும், அவரது கட்சியினர் முன்கூட்டியே தொகுதி பிரச்சனையில் ஆழமாக இறங்கி தூர் வார ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக குடிநீர் பிரச்சனையை கையிலெடுத்து தொகுதி முழுக்க 6 மாசமாக இலவசமாக குடி நீர் விநியோகம் செய்து வந்தனர் மய்ய உறுப்பினர்கள்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ஆனால் எம்பி மற்றும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பில் கமல் பெயர் அறிவிக்கப்படவில்லை. மாறாக, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் தொகுதி பக்கம் சில நாட்களுக்கு எட்டி பார்க்கவில்லை என்றே குற்றஞ்சாட்டப்பட்டது.

    எஞ்சிய வாழ்க்கை

    எஞ்சிய வாழ்க்கை

    ஏப்ரல் 13-ம் தேதி கமல் பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது பேசியபோது, "சிறந்த மனிதனாகத் தமிழகத்துக்கான கடமையைச் செய்து முடித்துவிட்டுத்தான் செத்தான் என்பதுதான் எனக்கு வேண்டும். என்னுடைய எஞ்சிய வாழ்க்கை மக்களுக்குத்தான்" என்று உருக்கமாக பேசினார்.

    பரமக்குடி

    பரமக்குடி

    ஆனால் மற்ற தொகுதிகளுக்கு கமல் எப்படி பிரச்சாரம் செய்தாரோ, அதுபோலவேதான் பரமக்குடிக்கும்! எந்த ஸ்பெஷல் சிரத்தையும் சொந்த ஊர் என்பதால் எடுத்து கொள்ளவில்லை. இங்குதான் சிக்கலே. கமல் இந்த இடத்தில்தான் தவறு செய்துவிட்டார். இங்கு அவர் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்பதே சரி.

    4-வது இடம்

    4-வது இடம்

    இன்றைய வாக்கு எண்ணிக்கையில், பரமக்குடியில் அதிமுக முதலிடத்திலும், திமுக இரண்டாம் இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது. நான்காவது இடத்தைதான் மக்கள் நீதி மய்யம் பிடித்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

    போட்டியிடாத கமல்

    போட்டியிடாத கமல்

    தன் கட்சியின் பலத்தை சீர்தூக்கி பார்ப்பதற்காக கமல் தனித்து போட்டி என்பதைகூட ஒரு விதத்தில் ஏற்கலாம். ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் கமல் போட்டியிட்டால், அதற்கு யார் மறுப்பு சொல்லி இருக்க போகிறார்கள். பரமக்குடி தொகுதியில் கமல் போட்டியிட்டு இருந்தால், குறைந்தது 2-வது அல்லது 3-வது இடத்தையாவது பிடித்திருப்பார் என்றே தோன்றுகிறது.

    அதிக நம்பிக்கை

    அதிக நம்பிக்கை

    தமிழகத்துக்கு சின்ன குழந்தையிலேயே அறிமுகமான கமலுக்கு என்று தனியாக பிரச்சாரம் தேவை இல்லை. அதேபோல, அந்த ஊர் மக்களும் எப்படியோ போட்டியிடுவார் என்றே நம்பினார்கள். சொந்த ஊர் மக்களின் நம்பிக்கையையும் பாழாக்கி, இப்படி 4-வது இடத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது கமலாக தேடி கொண்டதுதான், வேறு யாரும் காரணம் இல்லை!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+