Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை: ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1,000 பட்டினி சாவுக்கு அஞ்சி 15 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் வருகை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Recommended Video

    ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1000...இலங்கை தமிழர் வேதனை!

    இதனால் இலங்கையில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 60 இலங்கை தமிழர்கள், ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பங்களை சேர்ந்த மேலும் 15 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

    தமிழகம் நோக்கி வரும் இலங்கை தமிழர்கள்

    தமிழகம் நோக்கி வரும் இலங்கை தமிழர்கள்

    ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகள் இலங்கைக்கு அருகே இருப்பதால் இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏராளமான இலங்கை தமிழர்கள் இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பையும் மீறி ஃபைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

    15 இலங்கை தமிழர்கள் வருகை

    15 இலங்கை தமிழர்கள் வருகை

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு பைப்பர் படகில் ஆணைக்கோட்டம் மற்றும் காக்கா தீவை சேர்ந்த யோகன், மாலா, கதிரமலை, ஜெயராம், பேபி ஷாலினி என்ற 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பங்களை சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கினர்.

     பச்சை மிளகாய் விலை ரூ.1,000

    பச்சை மிளகாய் விலை ரூ.1,000

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இலங்கை தமிழர் ஒருவர் தெரிவிக்கையில், "அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி வாங்கி சாப்பிட முடியும்?

    பட்டினி சாவு அபாயம்

    பட்டினி சாவு அபாயம்

    இலங்கையில் மருத்துவ பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல் தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்டினி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தமிழகத்திற்கு அகதிகளாக வந்திருக்கிறோம்." என்றார்.

    முகாமில் தங்க வைப்பு

    முகாமில் தங்க வைப்பு

    அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்ததற்கு பின்னர் 15 இலங்கைத் தமிழர்களும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டனர். மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+