பயங்கர ஆத்திரம்.. மாமியாரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன முருகன்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே குடிபோதையில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் நேராக போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது இடிஞ்சகல் புதுர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் தனது மாமியார் பொன்னம்மாளிடம் தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

இதேபோல் நேற்றிரவும் முருகன் குடித்துவிட்டு மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பொன்னம்மாள் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மாமியார் என்றும பாராமல் பொன்னம்மாளை சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து குத்திக்கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய முருகன், நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications