திடீரென எமோஷன் ஆன ஓபிஎஸ்! அப்படியே உள்ளே போய் அமர்ந்து.. அடுத்து நடந்த சம்பவம்! உற்று பார்த்த ஓபிஎஸ்
ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று ஓ பன்னீர்செல்வம் வழிபாடு நடத்தினார்.
முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்று வருகின்றனர்.
குரு பூஜை காரணமாக தேவர் சிலைக்கு பல தலைவர்கள் இன்று மரியாதை செய்து வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முத்துராமலிங்க தேவர் நினைவிடம்
இதையடுத்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று ஓ பன்னீர்செல்வம் வழிபாடு நடத்தினார். இதையடுத்து அங்கு இருந்த தேவர் சிலைக்கு வெள்ளி கவசத்தை ஓ பன்னீர்செல்வம் வழங்கினார். அதன்பின் இந்த கவசம் பொருத்தப்பட்டு சிலை திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை ஓ பன்னீர்செல்வம் இந்த சிலைக்கு வழங்கி இருந்தார். அங்கு இருந்த தேவர் சமுதாயத்தினர் இடையே இந்த சமபவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஓ பன்னீர்செல்வம்
அதிமுகவில் தற்போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் தொடர்பாக மோதல் எழுந்து உள்ளது. பொதுவாக முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக தங்க கவசம் அணிவிக்கப்படும். இந்த கவசம் அதிமுகவின் சொத்து. தங்க கவசத்தை அணிவித்துவிட்டு, பின்னர் பூஜை முடிந்ததும் அதை வங்கியில் மீண்டும் பாதுகாப்பாக வைத்து விடுவார்கள்.

வழிபாடு
இதற்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு தரப்பினரும் உரிமை கோரினர். தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. இரண்டு தரப்பின் கோரிக்கையும் ஒன்றாக நேற்று நிராகரிக்கப்பட்டது. மாறாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், தேவர் தங்கக் கவசத்தை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் தேவர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் இன்று வெள்ளி கவசத்தை வழங்கினார். உள்ளே சென்று ஓ பன்னீர்செல்வம் வழிபாடு நடத்திய போது, தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு.. ஐயா.. ஐயா என்று உணர்ச்சிகரமாக கோஷம் எழுப்பினார்கள். உணர்ச்சி பொங்க அவரிடம் பேசினார்கள். அப்போது எம்பி ஓ பி ரவீந்திரநாத் உடன் இருந்தார். கண்களில் லேசாக கண்ணீருடன் உணர்ச்சி பொங்க அவர் நின்று கொண்டு இருந்தார்.

வெள்ளிக்கவசம் - தியானம்
இதையடுத்து சட்டென உடனே உள்ளே சென்ற ஓ பன்னீர்செல்வம் அங்கு இருந்த தேவர் படத்திற்கு முன் சட்டென அமர்ந்தார். என்ன நினைத்தாரோ திடீரென அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார் ஓ பன்னீர்செல்வம். அப்படியே அங்கேயே உட்கார்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தார். இவர் தியானம் செய்ய போவதை எதிர்பார்க்காத நிர்வாகிகள் மற்றும் ரவீந்திரநாத் அவரும் திரும்பி வரும் வரை காத்து இருந்தனர். இந்த குரு பூஜையில் இன்று ஓ பன்னீர்செல்வம் மிகவும் நெகிழ்ச்சியாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications