முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா! பசும்பொன்னில் அன்னதானத்தை தொடங்கி வைக்கும் ஓ.பன்னீர்செல்வம்!
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் ஜெயந்தி விழாவை ஒட்டி அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த சில நாட்களாக அன்னதானத்தை தொடங்கி வைக்குமாறு முக்குலத்தோர் அமைப்பினர் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதனால் ஓபிஎஸ் சற்று உற்சாகம் அடைந்திருப்பதுடன் அன்னதானத்திற்கும் தன்னால் இயன்ற தொகையை வாரி வழங்கி வருகிறாராம்.

முத்துராமலிங்கத் தேவர்
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். தேவரின் நினைவிடம் அருகே முக்குலத்தோர் அமைப்பினர் சார்பில் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தென்நாடு மக்கள் கட்சி
இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவன்று தென்நாடு மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் கிராமத்தில் நடத்தப்படவுள்ள அன்னதானத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கவிருக்கிறார். இன்னும் ஒரு சில அமைப்புகளும் ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு விடுத்திருப்பதால் அவர்கள் நடத்தும் அன்னதானத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இதனால் ஓபிஎஸ் சற்று உற்சாகம் அடைந்திருப்பதுடன் அன்னதானத்திற்கும் தன்னால் இயன்ற தொகையை வாரி வழங்கி வருகிறாராம்.

நினைவிடத்தில் மரியாதை
மாவட்ட நிர்வாகத்தின் புரோட்டகால் படி திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி புறப்பட்ட பிறகு அதிமுகவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியையோ அல்லது அவர் சார்பில் வரும் முன்னாள் அமைச்சர்களையோ முந்தி முதல் ஆளாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.

ஜெயபிரதீப்
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் சார்பில் அவரது இளைய மகன் ஜெயபிரதீப் பசும்பொன் கிராமத்தில், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நாம் இது குறித்து விசாரித்ததில் இன்னும் இது தொடர்பாக அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை என பதில் வந்தது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications