Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 மடங்கு நிதி கொடுத்துள்ளோம்.. ஆனாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்.. பிரதமர் மோடி விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் 7 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள போதும், சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அவரால் அழுக மட்டுமே முடியும் என்று கிண்டல் செய்துள்ள அவர், 2014ஆம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட்டிற்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன்பின் ராமநாத சுவாமி கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டார். அதன்பின் ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துகள்.

Pamban Bridge Rameswaram PM Modi

தொழில்நுட்பத்தையும், பாரம்பரியத்தையும் இன்று சேர்க்கிறது பாம்பன் பாலம். இந்த பாம்பன் பாலம்தான் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம். இது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பூமி. இந்த பாலத்திற்கான தேவை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் ரயில், சாலை போக்குவரத்து, விமான நிலையம், துறைமுகம், நீர், எரிவாயு குழாய்கள் அமைத்தால் போன்ற ஏராளமான கட்டமைப்புக்கான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது.

2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது இருந்ததை விடவும் கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆண்டுகளில் அதிக நிதியை அளித்திருக்கிறோம். ரயில்வே துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் 7 மடங்கு நிதியை அதிகரித்துள்ளோம். இவற்றை செய்த பின்னரும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும்.

அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. 2014க்கு முன்பு வரை தமிழ்நாட்டுக்கு ரயில்வே துறை சார்பாக ஆண்டுக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+