முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற போலி வீல்சேர் கிரிக்கெட் அணி கேப்டன் மீது வழக்குப் பதிவு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வினோத் பாபு பேக்கரி உரிமையாளரிடம் ரூ 1 லட்சம் பெற்று மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழ்செல்வனூரை சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடந்த ஆசிய கோப்பைக்கான வீல்சேகர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பங்கேற்று கோப்பை வென்றதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த வினோத் பாபு, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கஷ்டப்படுவதால் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பனின் தொகுதித்குள்பட்டவர் என்பதால் அவரை சந்தித்தும் வாழ்த்து பெற்றார்.
வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி அளிக்கும்படி கேட்டிருக்கிறார். இதையடுத்து அமைச்சரும் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சருடன் சென்னை சென்ற வினோத் பாபு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து லண்டனில் நடந்த போட்டியில் வென்றதாக கூறி வாழத்துகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் வினோத்பாபு கூறியதன் மீது சந்தேகம் இருந்ததால் உளவுத் துறையினர் விசாரணையில் இறங்கினர். வெளிநாடு சென்று விளையாட்டு போட்டிகளில் வென்றதாக கூறிய வினோத் பாபு எந்த வெளிநாட்டிற்கும் செல்லவில்லை என்பதும், அவரிடம் பாஸ்போர்ட் கூட கிடையாது என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியானது. இதுகுறித்து விசாரணை அறிக்கை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து வினோத் பாபுவிடம் கேட்ட போது பாரா ஒலிம்பிக் பளூ தூக்கும் போட்டியிலும் மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச வீல்சேர் கிரிக்கெட்டில் கேப்டனாக விளையாடியுள்ளேன். வெளிநாட்டிற்கு சென்று விளையாடி வென்றதாக தவறாக கூறிவிட்டேன். சுய முயற்சியில்தான் முதல்வரையும் அமைச்சரையும் சந்தித்து அரசு பணி வழங்க கோரிக்கை விடுத்தேன். மற்றபடி யாரையும் ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.
அதாவது கடையில் வாங்கி கோப்பையை உலக கோப்பை என முதல்வரிடம் காட்டி ஆசி பெற்றதும் தெரியவந்தது. மேலும் லண்டன் செல்ல பண உதவி வேண்டும் என கேட்டு பேக்கரி உரிமையாளரிடம் ரூ 1 லட்சம் மோசடியாக பெற்றதாக வினோத் பாபு மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸார் வினோத் பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications