முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற போலி வீல்சேர் கிரிக்கெட் அணி கேப்டன் மீது வழக்குப் பதிவு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வினோத் பாபு பேக்கரி உரிமையாளரிடம் ரூ 1 லட்சம் பெற்று மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழ்செல்வனூரை சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடந்த ஆசிய கோப்பைக்கான வீல்சேகர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பங்கேற்று கோப்பை வென்றதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த வினோத் பாபு, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கஷ்டப்படுவதால் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பனின் தொகுதித்குள்பட்டவர் என்பதால் அவரை சந்தித்தும் வாழ்த்து பெற்றார்.
வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி அளிக்கும்படி கேட்டிருக்கிறார். இதையடுத்து அமைச்சரும் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சருடன் சென்னை சென்ற வினோத் பாபு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து லண்டனில் நடந்த போட்டியில் வென்றதாக கூறி வாழத்துகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் வினோத்பாபு கூறியதன் மீது சந்தேகம் இருந்ததால் உளவுத் துறையினர் விசாரணையில் இறங்கினர். வெளிநாடு சென்று விளையாட்டு போட்டிகளில் வென்றதாக கூறிய வினோத் பாபு எந்த வெளிநாட்டிற்கும் செல்லவில்லை என்பதும், அவரிடம் பாஸ்போர்ட் கூட கிடையாது என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியானது. இதுகுறித்து விசாரணை அறிக்கை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து வினோத் பாபுவிடம் கேட்ட போது பாரா ஒலிம்பிக் பளூ தூக்கும் போட்டியிலும் மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச வீல்சேர் கிரிக்கெட்டில் கேப்டனாக விளையாடியுள்ளேன். வெளிநாட்டிற்கு சென்று விளையாடி வென்றதாக தவறாக கூறிவிட்டேன். சுய முயற்சியில்தான் முதல்வரையும் அமைச்சரையும் சந்தித்து அரசு பணி வழங்க கோரிக்கை விடுத்தேன். மற்றபடி யாரையும் ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.
அதாவது கடையில் வாங்கி கோப்பையை உலக கோப்பை என முதல்வரிடம் காட்டி ஆசி பெற்றதும் தெரியவந்தது. மேலும் லண்டன் செல்ல பண உதவி வேண்டும் என கேட்டு பேக்கரி உரிமையாளரிடம் ரூ 1 லட்சம் மோசடியாக பெற்றதாக வினோத் பாபு மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸார் வினோத் பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications