பட்டா பெயர் மாற்றம்.. ராமநாதபுரம் விஏஓ கையில் என்ன அது.. தலையெழுத்தையே மாற்றிய விவசாயி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பொட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கீழக்கொடும்பலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கீழக்கொடும்பலூர் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக அணுகியவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கி விஏஓ கைதாகி உள்ளார்.
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் வாங்க முயன்றாலோ, லஞ்சம் கேட்டாலோ தயவு செய்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளியுங்கள். அப்படி புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.

இதன் காரணமாகவே சில வருவாய் துறை அலுவலகங்களில், தாசில்தார், விஏஓ, சர்வேயர் உள்பட பல்வேறு அதிகாரிகள் லஞ்ச புகாரில் சிக்குவது நடக்கிறது. அப்படித்தான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு கிராமத்தில் பட்டா வழங்க லஞ்சம் கேட்ட புகாரில் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பொட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த 36 வயதாகும் சரவணன் என்பவர் கீழக்கொடும்பலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பட்டா விவகாரம் தொடர்பாக அணுகியுள்ளார்.
கீழக்கொடும்பலூர் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக சரவணனை அணுகியிருக்கிறார். அதற்கு அவர் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த விவசாயி முதலில் ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு அனுப்பியிருக்கிறாராம். மீதமுள்ள ரூ.2 ஆயிரத்தை கொடுக்க விரும்பாத விவசாயி, இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த பணத்தை முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து அந்த விவசாயி, சரவணனிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை சரவணன் வாங்கியபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரவணனை கையும், களவுமாக கைது செய்தார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications