சாகும் வரை உண்ணாவிரதம்! இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வருவதாகச் சொல்லி இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து வருகிறது.

அப்படி தான் கடந்த பிப். 4இல் இரண்டு விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. அவர்களில் இரு மீனவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் மற்றொரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இது மட்டுமின்றி அவர்கள் படகுகளையும் நாட்டுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சில தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடும் நிலையில், இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான் இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாகக் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிக்கத் தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திர ரீதியாகத் தலையிட வேண்டும் என்றும் மீனவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே இந்த மீனவர்களை விடுவிக்கக்கோரியும் இலங்கையின் புதிய சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்
நேற்றிரவு ராமேஸ்டவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கச்சிமடத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்டு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு












Click it and Unblock the Notifications