தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் கைது.. ஓயாத இலங்கை கடற்படையின் அட்டூழியம்!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 18 பேரை நடுக்கடலில் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்தியா- இலங்கை ஒப்பந்தப்படி தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமை உண்டு. ஆனால் இலங்கை கடற்படை இதனை நிராகரித்தே வருகிறது.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 18 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்தது. தங்களது நாட்டு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக அப்பட்டமான பொய் வழக்கைப் போட்டு இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications