திடீர் பரபரப்பு.. ராமநாதபுரத்தில் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிப்பு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இப்போது தொடங்கி நடந்து வரும் நிலையில், ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடந்தது. கடந்த சனிக்கிழமை கடைசிக் கட்ட தேர்தல் நடந்தது.

Tamil Nadu Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 DMK BJP ADMK 2024 2024

இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து ஈவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஒரு தொகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் இப்போது திமுக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ராமநாதபுரத்தில் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், பல தபால் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டது. முறையான கையெழுத்து இல்லை உள்ளிட்ட காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படியே ராமநாதபுரத்தில் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முகவர்கள் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடியும் தருவாயில் இது தொடர்பாக முகவர்கள் மீண்டும் கேள்வி எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+