Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவைத்தில் அடங்கிய உயிர்..கண்ணீரில் மூழ்கிய உறவுகள்! இராமநாதபுரம் ராமு உடல் அடக்கம்..ஓடோடி வந்த அரசு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கருப்பணன் ராமு வின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

kochin Kuwait Fire Accident ramanathapuram

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பற்றியது. இதனால் கட்டிடத்தின் பிற பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது.

அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்தது. மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

kochin Kuwait Fire Accident ramanathapuram

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசு சார்பில் சிறப்பு விமானம் அனுப்பி குவைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்தார். இதனையடுத்து 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் நேற்று மாலை கொச்சி வந்தடைந்தது.

கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அம்மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த வகையில் தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரின் உடல்கள் கொச்சி கொண்டுவரப்பட்டது.

kochin Kuwait Fire Accident ramanathapuram

அவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு செயலக தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து 7 பேரின் உடல்களும் ஏழு வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமு என்பவரின் உடல் இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

kochin Kuwait Fire Accident ramanathapuram

அவரது உடலைப் பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலியைத் தொடர்ந்து ராமுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமு மரணமடைந்ததை யொட்டி அவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸாடாலின் ரூ.5 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து நிவாரண தொகையை தென்னவனூரில் அவரின் குடும்பத்தினரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+