ராமேஸ்வரம் தெற்கு ரத வீதி சொகுசு விடுதியில் அலை மோதிய ஆண்கள் கூட்டம்.. மொத்தமாக சிக்கிய கும்பல்
ராமநாதபுரம்: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. அங்குள்ள ஒரு விடுதியில் விபச்சாரம் நடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவிலேயே மிகவும் அற்புதமான தீவுப்பகுதியில் உள்ள ஆன்மீக தலம் என்றால் அது ராமஸ்வரம் தான். இது கண்களை கவரும் வகையிலான இயற்கை அற்புதம் நிறைந்த அமைதியான பகுதியும் கூட. ராமேஸ்வரம் தனுஷ்கொடியில் இருப்பது போன்ற கடல் எங்குமே இல்லை. அதேபோல் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் இன்றும் பெருமைமிகு அடையாளமாக உளளது. ஆகும். புனித யாத்திரை தலமான ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில் இருக்கிறது.

இந்த கோயில் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கான புனிதமான இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மிக அருகில் உள்ள இடமாகவும் ராமேஸ்வரம் இருக்கிறது. இலங்கையில் இராவணனுடனான போர் முடிந்து திரும்பிய ராமர், மோதலின் போது தான் செய்த பாவங்களை போக்க சிவபெருமானை நினைத்து தவமிருந்து பிரார்த்தனை செய்ததாக நம்பப்படும் இடமாக ராமேஸ்வரம் இருக்கிறது. இப்படி ஆன்மீக ரீதியாகவும் சுற்றுலா ரீதியாகவும் புகழ்பெற்ற ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான ஆன்மீக சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அப்படிப்பட்ட ராமேஸ்வரம் கோயில் அருகே தெற்கு ரதவீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அடிக்கடி ஆண்கள் வந்து சென்றுள்ளனர். இறுதியாக அங்கு விபச்சாரம் நடப்பதை அந்த பகுதி மக்கள் கண்டுபிடித்தனர். இதுபற்றி சிலர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் சென்று அங்கு அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அறையில் காத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 34 வயதாகும் பெண், புதுக்கோட்டையை சேர்ந்த 40 வயதாகும் பெண், உடந்தையாக இருந்த விடுதி உரிமையாளர் செல்லமுத்து 63, ராமநாதபுரம் பெண்ணின் கணவர் பாலமுருகன் 40, ஏஜென்டாக இருந்த காளிதாஸ் 35, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications