இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை!
சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
Recommended Video
ரியாத்: சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
சவுதி அரேபியா ஹவுதி போராளி குழுக்கள் இடையிலான சண்டை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கடந்த சில மாதங்களாக சவுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது ஹவுதி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த வாரம் சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய 2 கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. கடந்த 3 மாதங்களில் 6 முறைக்கும் மேல் இது போல தாக்குதல் நடந்துள்ளது.

எப்படி தாக்குதல்
ரேடார் கண்ணில் படாமல் மிகவும் தாழ்வாக சென்று தாக்கும் வகையில் இந்த டிரோன்களை பறக்க வைக்கிறார்கள். இதனால் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்துவது இயலாத காரியமாகிறது. இந்த தாக்குதல் நடந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் தாக்கப்பட்ட இடங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

பாதிப்பு
இப்போதைக்கு இங்கு உற்பத்தி தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் சவுதியின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 65 உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த தாக்குதலில் மொத்தம் 5.7 மில்லியன் பேரல் எண்ணெய்கள் நாசம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

விலை
இதனால் தொடர்ந்து தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை 1.59 ரூபாயும், டீசல் விலை 1.31 ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த 2017ல் இருந்து பெட்ரோல் டீசல் விலையில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுதான்.

மிக மோசம்
தினமும் 20-30 பைசா வீதம் பெற்று டீசல் விலை உயர்கிறது. சென்னையில் இப்போதே பெட்ரோல் 74 ரூபாய்க்கும், டீசல் 67 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கிணறுகளில் இன்னும் உற்பத்தி தொடங்காத காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்று கூறுகிறார்கள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications