ரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்
ரியாத்:ரியாத் தமிழ்ச் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரியாத் தமிழ்ச் சங்கம் சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இயங்கிவரும் தமிழர் கூட்டமைப்பாகும். தமிழர்கள் நலன்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றதுக்கும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ரியாத் தமிழ்ச் சங்கத்தில் ஏராளமான உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். விழாக்கள், பண்டிகைகளின் போது ஒன்றிணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழுக்கும், தமிழர்களுக்கும் அயராது தொண்டு செய்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் 2019-20 ஆண்டுக்கான தனது நிர்வாகிகளை அறிவித்துள்ளது. அதன்படி, கவிஞர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நெளஷாத் அலீ துணைத் தலைவராகவும், செயலாளராக செந்தில்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொருளாளர் பொறுப்பில் சதீஷும், இணை செயலராக சரவணனும் பொறுப்பேற்று வழி நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வான நிர்வாகிகளுக்கு, ரியாத் வாழ் தமிழர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications