சேலத்தில் 47 ரவுடிகள் சுற்றிவளைப்பு... அதிரடி காட்டிய போலீஸ்
சேலம்: 'தலைநகரம்' படத்தில் வரும் காட்சி போல், சேலத்தில் ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்கும் பொருட்டு, காவல் ஆணையாளர் சங்கர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.

அந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, குற்றப்பின்னணி உடைய தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வீடுவீடாக சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 47 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக, தனியே நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்ததால், பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இதனை தடுக்கும் வகையில் ரவுடிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதே போன்று, கடந்த 31ம் தேதி 37 ரவுடிகள் கைது செய்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications