நிறைய டைரக்டர்கள் வர்றாங்க.. கேட்கறாங்க.. பயோபிக் படத்துக்கு 'நோ' சொன்ன நடராஜன்!
சேலம்: 'எனது வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் வீடு தேடி வந்தனர். ஆனால், இப்போது எனக்கு ஆர்வம் இல்லை' என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நடராஜன்.. இந்தியாவின் சொத்தாக மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் வீரர். விராட் கோலியின் era-வில் இந்திய அணியல் திறமையான, திடமான, ஸ்டிராடஜிகளுக்கு ஏற்ப சுயமாக சிந்தித்து பவுல் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் அணியில் இணைந்திருக்கும் ஆர்.நடராஜன், கோலி தொடங்கி கோச் சாஸ்திரி வரை அனைவர் மத்தியிலும் 'He is a Valuable Bowler' என்ற பெயருக்கான விதையை நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விதைத்துவிட்டார்.
இந்தியா திரும்பிய பிறகு பழனியில் மொட்டை, வேண்டுதல் நிறைவேற்றம் என்று பிசியாக இருக்கும் நடராஜன், நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ஓய்வுக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும், உடல் வலிமையை அதிகரிக்க பிசிசிஐ அளித்துள்ள ஆலோசனைக்கு ஏற்ப அடுத்த மூன்று வாரத்திற்கு பயிற்சி மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், ஆஸ்திரேலிய தொடர் முடிந்து வீட்டுக்கு திரும்பி இவ்வளவு நாட்கள் கழித்தும் ரசிகர்கள் பலர் என்னைப் பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இப்போதெல்லாம் வெளியில் கூட போக முடியவில்லை. முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எப்பொழுதும் சாதாரண மனிதனாக இருக்கவே விரும்புகிறேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
குறிப்பாக, எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் வீடு தேடி வந்தார்கள் என்றும், ஆனால் அதில் தனக்கு ஆர்வமில்லை; கிரிக்கெட்டில் மட்டும் முழு கவனம் செலுத்த விரும்புவதாகவும் நடராஜன் கூறியிருக்கிறார்.
இறுதியாக, 2015ல் எனது பந்துவீச்சு சந்தேகத்துக்குள்ளாகி தடை விதிக்கப்பட்ட போது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்து, மனதளவில் பாதிக்கப்பட்டேன். ஆனால், அதன் பிறகு நண்பர்கள், பயிற்சியாளர்கள் உதவியுடன் மீண்டு வந்தேன். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றும் உருக்கமாக பேசினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications