புயல் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்
Recommended Video
கஜாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்-வீடியோ
சேலம்: புயல் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று, முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலத்தில் இன்று காலை 11 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், கஜா புயலால் 11 பேர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
அரசு எடுத்த தகுந்த முன்னெச்சரிக்கையின் மூலமாக, உயிர் சேதம் குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயகுமார் நாள் முழுவதும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
Comments
English summary
Government will give 10 Lakhs to the family who are killed by cyclone Gaja impact.