கர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு!
சேலம்: கர்நாடகாவில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் காவிரியில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.
கடந்த மாதம் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்தது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிறைந்து மேட்டூருக்கு நீர் அங்கிருந்து திறந்து விடப்பட்டது.

காவிரியில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து மேட்டூர் அணையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து அங்கு விடாமல் மழை பெய்து வருகிறது.
முக்கியமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் வயநாடு பகுதியிலும் மழை பெய்வதால் காவிரிக்கு தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 45,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் 30,000 கன அடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,076 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications