எடப்பாடி ஊரிலேயே ஓட்டை போட்ட தவெக.. சேலம் முன்னாள் எம்எல்ஏ-வை தூக்கிய செங்கோட்டையன்!
சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியை செங்கோட்டையன் தூக்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜூலை மாதமே தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து வேட்பாளர்களை உறுதி செய்தார். இதனிடையே அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.

ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். இதுவரை அதிமுக 5 ஆண்டுகளுக்கு மேல் எதிர்க்கட்சியாக இருந்ததாக வரலாறே இல்லை.
இதனால் அதிமுகவினர் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து வெளியேற்றி வருகிறார்.
அந்த வகையில் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பல்பாக்சி சி.கிருஷ்ணன் கொள்கைகளுக்கு முரணாகவும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு கற்பிக்கும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சி.கிருஷ்ணனுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியை எடப்பாடி பழனிசாமி நீக்கி இருப்பது பேசுபொருளாகியது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு கால தாமதமானது என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ சி.கிருஷ்ணன், செங்கோட்டையன் முன்னிலையில் நேற்றே தவெகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்பாக மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து திமுக பக்கம் சென்றனர். அண்ணா அறிவாலயம் வந்த பின்னரே, அவர்கள் திமுகவில் இணைய இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது. இதன்பின் வேக வேகமாக இருவரும் நீக்கி அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது சொந்த மாவட்டத்திலேயே நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்காமல் எடப்பாடி பழனிசாமி தாமதமாக நடவடிக்கை எடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications