கொடுத்த கடனை யாரும் திருப்பி தராததால்.. சேலத்தில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கொடுத்த கடனை யாரும் திருப்பி தராததால் ஒரே குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை-வீடியோ

    சேலம்: சேலம் அருகே கொடுத்த கடனை யாரும் திருப்பி தராததால் வறுமைக்கு தள்ளப்பட்ட ஒருவர், விரக்தி அடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் மாவட்டம் கருங்கல் பட்டி பகுதியில் சிவராமன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசிந்து வந்துள்ளார்.

    In Salem, three of the same family members committed suicide

    இவர் தன்னிடம் இருந்த பணத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வட்டிக்கு கொடுத்துள்ளார். அந்த வட்டிப்பணத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
    இந்நிலையில், கடன் வாங்கிய யாரும் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் சிவராமனின் குடும்பம் வறுமையில் வாடியது. யாரும் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்களே என்று சிவராமன் விரக்தி அடைந்துள்ளார். வறுமை நிலையை எண்ணி வேதனை அடைந்த சிவராமன் தனது குடும்பத்தோடு நேற்ற இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் சிவராமன் உள்ளிட்ட 3 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் விவகாரத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+