டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் போராட்டம்
சேலம்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் இடதுசாரிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றினர்.
Recommended Video

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த 18 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் செல்ல முற்பட்டாலும் இவர்கள் அந்தந்த மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இதனால் விவசாயிகள், அரசியல் கட்சியினர் என ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சேலத்தில் இடதுசாரி கட்சிகள், பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications