வளர்ப்பு நாய் கடித்தாலும் கவனம் மக்களே.. சேலத்தில் ஓராண்டு கழித்து ரேபிஸ் தாக்கி உயிரிழந்த தொழிலாளி
சேலம்: சேலம் மாவட்டம் (Salem - dog) ஆத்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் அதற்கு சிகிச்சை பெறாமல் இருந்த நபர் திடீரென உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெரு நாய்களால் அவ்வப்போது பலர் கடிபட்டு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் தர்மன். அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்துள்ளார். இந்த வளர்ப்பு நாயானது கடந்த ஆண்டு இவரை கடித்துள்ளது. இதற்கு அப்போது சிறிய சிகிச்சை மட்டுமே எடுத்துக்கொண்டு காயம் ஆறியதும் அப்படியே விட்டுள்ளார்.

அதன்பிறகு அவர் வேலைக்கு சென்று வழக்கமான முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் நிலை சரியில்லாமல் போனதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இங்கு மேல் சிகிச்சை செய்ய முடியாது எனவும், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தனர்.
அதன்படி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தர்மன் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி தர்மன் உயிரிழந்தார். இதைப் பார்த்து அவரது தாய் கண்ணீர் மல்க கதறி அழுதார். இது பற்றி அவரது தாய் கூறுகையில், "நாய் கடித்து அதற்கு சரியான சிகிச்சை பெறாததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக" கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications