கமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு தகவல்
சேலம்: கமல்ஹாசனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது. இந்து விரோதியான அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மன்னார்குடி ராமானுஜ ஜீயர் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சேலம் அம்மாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்னார்குடி ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் என பேசியது கண்டிக்கத்தக்கது.

அவர் ஒரு இந்து விரோதி ஆதலால் தேசத் துரோகியும் ஆவார். அரசியலுக்காகவும் சுயலாபத்திற்காகவுமே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
மேலும் கமலஹாசனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது. அவருக்கு அந்தத் தீவிரவாத அமைப்பு நிதி அளித்து வருகிறது.
மேலும் இந்து தர்மத்தை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு கமலஹாசன் தொடர்ந்து பேசி வருகிறார். அவரது இந்த பேச்சுக்கு அகில பாரத சன்னியாசி சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
கமல்ஹாசன் மட்டுமின்றி இந்து விரோத செயல்களில் ஈடுபடும் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications