புதிய மோட்டார் வாகன சட்ட அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு.. நாளை நாடு முழுவதும் லாரிகள் ஓடாது
Recommended Video
சேலம்: மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வலியுறுத்தியும் நாடு முழுவதும் நாளை (19-ந்தேதி) ஒரு நாள் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் நாடு முழுவதும் விதிக்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சாலை விதிமீறலுக்கு கடுமையான அபராதம் விதிப்பது லாரி தொழிலை கடுமையாக பாதிக்கிறது என லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழநாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறுகையில், "புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், 44-ஏ.இ. வருமான வரி விதியை ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை லாரிகள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது என்றார். .
நாளை இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 390 லாரிகளும் இயங்காது என்றும் சென்னகேசவன் கூறினார்.
இதனால் தமிழகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களும், சேலம் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்களும் தேக்கம் அடையும். எனவே, தமிழகத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1 கோடி வருவாய் இழப்பும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications