ஓரின சேர்க்கையா.. என் புருஷன் அழைத்தாரா.. சான்ஸே இல்லை.. அடித்து கூறும் சேலம் மோகன்ராஜ் மனைவி!
சேலம் மோகன்ராஜ் மனைவி கலெக்டரிடம் மனு தந்துள்ளார்
Recommended Video
சேலம்: ஓரின சேர்க்கையா.. என் புருஷன் உறவுக்கு அழைத்தாரா.. அப்படியெல்லாம் கிடையாது.. அந்த வீடியோவில் இருப்பது என் கணவர்தான்.. ஆனால் 7 பெண்களை எல்லாம் அவர் நாசம் செய்யவில்லை" என்று சேலம் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் மனைவி சேலம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் விசிக ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். 'ஆனால் இவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
காக்காபாளையம் பஸ் ஸ்டேண்ட் அருகே ஒரு பொது கழிப்பறை உள்ளது. இங்கு பாத்ரூமுக்குள் வந்த முருகேசன் என்பவரை ஓரினச் சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தபிறகுதான், பல விவகாரங்கள் வெளியே வந்தன.
நீ இருப்பா.. நீ லெப்ட்ல போ.. ரைட்ல திரும்பு.. போப்பா.. போங்க போங்க.. அது யாரு.. அட நம்ம கதிரு!
வீடியோ
அவரிடம் இருந்த செல்போனில், மோகன்ராஜ் பெண் ஒருவரை மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பதும், அந்த வீடியோவை, மோகன்ராஜே, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இதைதவிர, மோகன்ராஜ் 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவை அந்த செல்போனிலேயே மோகன்ராஜ் பதிவுசெய்து வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஓரின சேர்க்கை
ஆனால், அந்த 7 பேரில் ஒரு பெண்கூட இது சம்பந்தமான புகார் எதுவும் இதுவரை தரவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் மோகன்ராஜின் மனைவி பரிமளா மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். "என் கணவர் மோகன்ராஜ் மீது போலீசார் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர்.
மனைவி பரிமளா
தொழில் போட்டி காரணமாகவே இப்படியெல்லாம் பொய்கள் ஜோடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை வேண்டும். 7 பெண்களை என் கணவர் நாசமாக்கினார் என்று சொல்வதெல்லாம் பொய். ஆனால் வெளியான அந்த வீடியோவில் பெண்ணுடன் இருப்பது என் கணவர் மோகன்ராஜ்தான்" என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் வந்து இந்த மனுவை தந்துள்ளார் பரிமளா.
ஆர்டிஓ விசாரணை
மோகன்ராஜின் பாலியல் வக்கிரம் தாங்காமல் 2 மனைவிகளும் ஓடிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது மனைவி பரிமளா கலெக்டரிடம் மனு தந்துள்ளதும், ஆர்டிஓ விசாரணை கோரியுள்ளதும் பரபரப்பை தந்துள்ளது.