இது ஸ்பெஷல்.. ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன்.. கலெக்டர் ரோகிணி கண்ணீர்!
சேலம் கலெக்டர் ரோகிணி விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றினார்
Recommended Video
சேலம்: கடைசி கூட்டம் என்பதாலோ என்னவோ, கலெக்டர் ரோகிணிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. விவசாயிகள் கூட்டத்தில் உருக்கமாக பேசி கண்ணீரோடு விடைபெற்றார்.
கடந்த 2017 ம் ஆண்டு சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ரோகிணி பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பங்கேற்ற முதல் கூட்டமே விவசாயிகள் குறைதீர் கூட்டம்தான்.
சேலத்தில் தொடர்ந்து 20 மாத காலம் பணியாற்றிய ரோகிணி விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி கல்லூரி குழந்தைகள் உள்பட அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார். சேலத்தில் இவர் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இவர் பிரபலமானார்.

பதிவுகள்
இந்நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்டவர்களுக்கு பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ரோகிணி தான் எங்களுக்கு கலெக்டராக வர வேண்டும் என்று மாவட்ட மக்கள் இணையத்தில் பதிவுகளை போட ஆரம்பித்தனர்.

வருத்தம்
இந்நிலையில் இன்று சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரோகிணி கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் பலர் ரோகிணியின் பணியிட மாறுதலுக்கு வருத்தம் தெரிவித்து உணர்ச்சிபூர்வமாக வாழ்த்தினர்.

சால்வை
கூட்ட முடிவில் விவசாயி ஒருவர் ரோகிணிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை பெற்று கொண்டு பேசிய ரோகிணி, "எனக்கு இதுக்கு முன்னாடி எத்தனையோ சால்வைகள் அணிவித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இந்த விவசாயி அணிவித்த சால்வையை ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.

கண்ணீர்
ஒரு கலெக்டராக மட்டுமின்றி ஒரு விவசாயியின் பெண்ணாகவும் விவசாயிகளின் பாராட்டை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று சொல்லும்போதே கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. சால்வையை கையில் இறுக்கி பிடித்து கண்ணீர் விட்டார் ரோகிணி. அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை












Click it and Unblock the Notifications