17 ஆண்டாக சேலம் பக்தர் அலைகழிப்பு.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 45 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்
சேலம்: 17 ஆண்டுகளாக காத்திருந்தும் பக்தரை குறிப்பிட்ட சேவையின் கீழ் அனுமதிக்காததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 45 அபராதம் அளித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சேலம் அழகாபுரம் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால். இவரது மகன் ஹரிபாஸ்கர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்கு பதிவு செய்திருந்தார்.
அதாவது இருவருக்கும் சேர்த்து ரூ 12,250 செலுத்தியிருந்நதார். அப்போது அவர்களுக்கு எஸ்.எல்.நம்பர் ஒதுக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதிக்கு தரிசனம் என ஒதுக்கப்பட்டது.

14 ஆண்டுகள்
அதாவது கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து தரிசனம் என ஒதுக்கப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேல் சாத்து வாஸ்திர சேவை தரிசனம் செய்ய கொரோனா ஊரடங்கால் வேறு ஒரு தேதி அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது.

மேல் சாத்து வாஸ்திர சேவை
பின்னர் மேல்சாத்து வாஸ்திர சேவைக்கு வாய்ப்பில்லாததால் பிரேக் தரிசனம் செய்ய தரிசனம் தேதி தருவோம் என தேவஸ்தானம் கூறியிருந்தது. ஆனால் 17 ஆண்டுகளாகியும் அந்த பிரேக் தரிசனத்திற்கு கூட தேவஸ்தானம் ஏற்பாடு செய்து தரவில்லை என தெரிகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இதையடுத்து தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர் நீதிமன்றததில் ஹரி பாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரத்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, " திருப்பதி தேவஸ்தானம் இன்னும் ஓராண்டில் மனுதாரருக்கு மேல்சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ரூ 45 லட்சம் இழப்பீடு
இல்லாவிட்டால் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தரிசனத்திற்காக ஹரிபாஸ்கர் செலுத்திய ரூ 12.250 ரூபாயையும் உத்தரவு பிறப்பித்த இரு மாதங்களில் ஹரிபாஸ்கருக்கு செலுத்த வேண்டும். இல்லாவிட்டல் 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து திருப்பதி தேவஸ்தானம் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications