Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாரி டிரைவரிடம் சசிகலாவுக்கு வந்த காதல்.. இவரெல்லாம் ஒரு பெண்ணா? ஆத்தூர் அரசு பள்ளி மாணவி பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் தாய் செய்த கொடுமையை கேட்டு, ஒட்டுமொத்த பேரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. பள்ளி ஆசிரியை மேற்கொண்ட முயற்சி காரணமாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

சேலம் மாவட்டம், ஆத்துரை சேர்ந்த அந்த சிறுமிக்கு 14 வயதாகிறது.. அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்... நாளுக்கு நாள் சோகத்துடனும், சோர்வுடனும் சிறுமி காணப்படுவதை பள்ளி ஆசிரியர்கள் கவனித்துள்ளனர்.

Salem Government School Lorry driver

அதனால், சிறுமியை அழைத்து கேட்டபோதுதான், அந்த பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.. அதாவது வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.. குமரேசன் ஒரு லாரி டிரைவர்.. 50 வயதாகிறது.

பள்ளி ஆசிரியை அதிர்ச்சி

இதைக்கேட்டு அதிர்ந்த பள்ளி வகுப்பு ஆசிரியை, இந்த விஷயத்தை மாணவியின் அப்பாவிடம் சொல்லவும், அவர் உடனடியாக சேலம் குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் சேலம் மகளிர் போலீசார் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், லாரி டிரைவர் குமரேசனுக்கும், சிறுமியின் அம்மா சசிகலாவுக்கும் இடையே தகாத உறவு இருப்பது தெரியவந்தது..

அதுமட்டுமல்ல, கடந்த பிப்ரவரி 17ம்தேதி, வீட்டில் இருந்த தன்னுடைய மகளை, காதலன் குமரேசனுடன் உல்லாசமாக இருக்கும்படி, கட்டாயப்படுத்தியதே சசிகலா தானாம்.. ஆனால், இதற்கு சிறுமி ஆரம்பத்திலேயே கடுமையான எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்துள்ளார்.. ஆனாலும், சிறுமியை குமரேசன் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

அம்மா தான் எல்லாத்துக்கும் காரணம்

இதற்கு பிறகு, பிப்ரவரி 20, மார்ச் 3ம் தேதிகளிலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... சிலசமயம் ஒரே நாளில், இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.. இந்த அத்தனை கொடுமைகளுக்கும், சிறுமியின் தாய் சசிகலாதான் உடந்தையாக இருந்துள்ளார்..

இதையடுத்து ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் குமரேசன், அம்மா சசிகலா இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர்.. கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளும் அவர்கள் மீது பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

நம்பிக்கை துரோகம்:

சசிகலாவுக்கு 35 வயதாகிறது.. சிறுமியின் தந்தையும் லாரி டிரைவர் ஆவார்.. இவரது நண்பர்தான் குமரேசன்.. தன்னுடைய நெருங்கிய நண்பன் என்ற முறையில் வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.. ஆனால், இதுவே சசிகலாவுடன் கள்ளக்காதலில் கொண்டுபோய் முடிந்துள்ளது.. மனைவியின் கள்ளக்காதல், மகளை மிரட்டி பலாத்காரம் என இருவிதமான அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறாராம் சிறுமியின் தந்தை...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+