Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஷாக்.. ஊர்க்காவல் படை பெண்ணுக்கு கத்திக்குத்து.. சேலம் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பயங்கரம்

பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப சேலம் பஸ் நிலையத்தில் பஸ்சில் ஊர்க்காவல்படை யூனிபார்மில் இருந்த அஞ்சலி தேவி மீது பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் பழைய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் இன்று யூனிபார்மில் இருந்த ஊர்க்காவல் படை பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஊர்க்காவல் படையில் வேலை செய்து வருகிறார். இவர் இன்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அவர் ஊர்க்காவல் படை யூனிபார்ம் அணிந்து பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். இந்த வேளையில் கிச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். சதீஷ் குமாருக்கும், அஞ்சலி தேவிக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

கத்திக்குத்து

இந்நிலையில் தான் பஸ்சில் இருந்த அஞ்சலி தேவியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அஞ்சலி தேவி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை விரட்டி சென்ற சதீஷ் குமார், அஞ்சலி தேவியின் தோள்பட்டையில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்து அஞ்சலி தேவி கதறினார். இதையடுத்து சதீஷ் குமார் அங்கிருந்து ஓடிவிட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து உடனடியாக அஞ்சலி தேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கத்திக்குத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அஞ்சலி தேவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக தன்னை சதீஷ் குமார் கத்தியால் குத்தினார் என்பது பற்றி அஞ்சலி தேவி போலீசாரிடம் விளக்கமாக கூறியுள்ளார்.

போலீஸ் சொல்வது என்ன?

போலீஸ் சொல்வது என்ன?

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அஞ்சலி தேவியை கத்தியால் குத்திய சதீஷ் குமார் ரேஷன் கடையில் தற்காலிகமாக பணியாற்றினார். இந்த வேளையில் அஞ்சலி தேவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் தவணை முறையில் பணம், நகைகளை பெற்றுள்ளார். மொத்தம் ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளை அஞ்சலி தேவி, சதீஷ் குமாரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் பணி பெற்று கொடுக்கவில்லை. மாறாக அவர் வேறு பணிக்கு மாறியுள்ளார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதனால் கொடுத்த நகை, பணத்தை திரும்ப தரும்படி அஞ்சலி தேவி கேட்டுள்ளார். அப்போது கூடுதலாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து சதீஷ் குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரால் கோபமடைந்த சதீஷ் குமார் அஞ்சலி தேவியை கத்தியால் குத்தியுள்ளார்'' என்றனர். மேலும் இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

சேலம் பழைய பஸ் நிலையம் என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த நிலையில் ஊர்க்காவல் படை யூனிபார்மில் இருந்த அஞ்சலி தேவியை, சதீஷ் குமார் பட்டப்பகலில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+