பிணத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. அதிர வைக்கும் "சைக்கோ கில்லர்".. கதி கலங்கும் சேலம்!!
Recommended Video
சேலம்: சடலத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. பணத்தை எடுப்பதுதான் இந்த சைக்கோ கில்லரின் முக்கிய வேலையே! ரோட்டோரம் தூங்கி கொண்டிருப்பவர்களின் தலையில் கல்லைதூக்கி போட்டு கொன்று வரும் இந்த சைக்கோவை கண்டு சேலம் பகுதி மக்கள் நடுங்கி வருகின்றனர்!
சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வாட்ச்மேன்கள் மர்மமான முறையில் இறந்து வந்தனர்.. இரவு நேரங்களில் டியூட்டிக்கு வரும் வாட்ச்மேன்கள் பொழுதுவிடிந்து பார்த்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பார்கள்.
தினமும் ஒரு கொலை என்று சென்னையை மிரட்டி எடுத்தான் அந்த சைக்கோ கொலையாளி.. சென்னை போலீசுக்கும் இந்த வழக்கு பெரும் சவாலாகவே அன்று இருந்தது!
"என்னை விட்டுடு.. கல்யாணமாயிடுச்சு... குழந்தையும் இருக்கு" கெஞ்சிய டீச்சரை உயிருடன் கொளுத்திய கொடுமை
சைக்கோ
அதுபோலவே சேலத்திலும் இப்போது கொலை விழுகிறது.. சேலம் காசகரனூர் பகுதியில் 2 நாளில் 2 கொலை என பீதி பொதுமக்களை சூழ்ந்துள்ளது.. கொல்லப்படுபவர்கள் எல்லாருமே வயசானவர்கள்தான்.. இவர்கள் யாருமில்லாத ஆதரவற்றவர்கள்.. வீடு வாசல் இல்லாமல் ரோட்டோரம் தூங்குபவர்கள்.. இவர்களைதான் குறிவைத்து சைக்கோ நபர் கொன்று வருகிறான்.
டயர் கடை வாசல்
இது சம்பந்தமான போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.. அதன்படி 3 மணியளவில் ஒருவர் தனியார் டயர் கடை வாசலில் தூங்கி கொண்டிருக்கிறார்.. அப்போது ஒரு மர்ம நபர் அங்கு வருகிறார்.. முதியவரின் தலையில் ஒரு பெரிய கல்லை போட்டு கொலை செய்கிறார்.. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கொலைகாரன்
இதற்கு பிறகு இன்னொரு முதியவரும் இதே போல் கொல்லப்படவும், அந்த பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அதே கொலைகாரன்.. அதேபோல் கல்லை தூக்கி.. முதியவரின் தலையில் போட்டு கொல்கிறான்.. அவர் இறந்த பிறகு அவரது சடலத்தை இப்படியும், அப்படியும் புரட்டி போட்டு.. பேன்ட், டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து செல்கிறார். இந்த நபர் யார் என தெரியவில்லை.
தனிப்படை
வயதானவர்களை குறி வைத்து கொலைகள் நடந்து வருவதால், இந்த கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து சேலம் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது சம்பந்தமான சிசிடிவி காட்சியையும் வெளியிட்டுள்ளனர்.. அதில் அந்த இளைஞர் படு கேஷூவலாக காணப்படுகிறார்.. கொலை செய்யும்போதும் சரி, சடலத்தின் பாக்கெட்டில் பணம் எடுக்கும்போதும் சரி.. எந்தவித பயம், பதட்டம், டென்ஷன் இல்லாமல் இருப்பதை பார்த்தாலே நடுங்குகிறது!