வறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்
Subscribe to Oneindia Tamil
சேலம்: வறட்சிக்கு பாடை கட்டி... ஒப்பாரி வைத்து நூதன நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர் சேலம் அருகே தென்னம்பிள்ளையூர் பொதுமக்கள்.
கடுமையான வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. குடிநீர் கிடைக்காமல் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மழை பொழிய வேண்டிய யாகங்கள், பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் பல இடங்களில் நூதன வழிபாடுகளை நடத்துகின்றனர்.
சேலத்தை அடுத்த தென்னம்பிள்ளையூர் பொதுமக்கள் வறட்சிக்கு பாடை கட்டி அனைத்து இறுதி சடங்குகளையும் செய்தனர். வறட்சி பாடை முன்பு பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.
பின்னர் மயானத்துக்கு கொண்டு சென்று பாடையுடன் வறட்சியை எரியூட்டினர். அப்போது ஆண்கள் சிலர் மொட்டை அடித்தனர். இப்படி செய்தால் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications