குளித்து கொண்டிருந்த கரகாட்ட பெண்.. வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்த இளைஞர் கைது
பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம்: கரகாட்ட பெண் குளிக்கும்போது 2 பேர் ஒளிந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தம்பதி துர்கா - வரதராஜ். துர்காவுக்கு வயது 26. கரகாட்டம் ஆடி பணம் சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த சென்றுள்ளார். அங்கு தனது சொந்தக்காரர் ராஜ்குமார் என்பவர் வீட்டில் தங்கியிருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று துர்கா குளிக்க சென்றபோது, அவருக்கு தெரியாமல், ராஜ்குமாரின் மகன் சிவா வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இல்லாமல் எடுத்த வீடியோவை அவரது நண்பன் குமாருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். குமார் அந்த வீடியோவை துர்காவின் கணவருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் குமாருக்கும், துர்கா கணவருக்கும் தகராறு வெடித்துள்ளது. அப்போதுதான் சிவா வீடியோ எடுத்து செல்போன் மூலம் அனுப்பி வைத்த விவரம் வெளியே வந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த துர்காவின் கணவர் இதுகுறித்து வரதராஜ் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ எடுத்த சிவா மற்றும் கணவனுடன் தகராறில் ஈடுபட்ட குமாரை கைது செய்தனர்.